பொன்னேரி அருகே தனியார் உணவகத்தில் ஓசி பிரியாணி கேட்டு தர மறுத்ததால், உணவகத்தை சூறையாடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் பிரவீன் என்பவர் தனியார் விரைவு உணவகம் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவரது கடைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஓசி பிரியாணி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் ஹோட்டல் உரிமையாளர் பிரவீன் என்பவரை தாக்கியதுடன் கடைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றது.
இதுகுறித்து அவர் உடனடியாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தும், காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாததால் அவர்கள் வர தாமதம் ஆனது.
4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் பிரவீன் பொன்னேரி காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெறும் போது அவர்கள் தாக்கியதையும், கடையை சேதப்படுத்தும் காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருகிறது.
வியாபாரிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தாலும், போதிய காவலர் பணியில் இல்லாததால் ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய முடியாத நிலை உள்ளது.
வியாபாரிகளை பாதுகாக்கும் விதமாக காவல்துறை உதவிட வேண்டும் எனவும், கூடுதல் காவலர்களை பொன்னேரி காவல் நிலையத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.