திருவள்ளூர் : தச்சூரில் அரசு பேருந்தில் பயணியை நடத்துனர் அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அரி என்பவர் தனியார் நிறுவன ஊழியராவார். இவர், கடந்த 6ம் தேதி கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் பகுதியில் செங்குன்றம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, படிக்கட்டில் நிற்க கூடாது என பேருந்து நடத்துனர் தேவன் தெரிவித்த போது, அவரை அவதூறாக பேசி தாக்கியதாகவும், நடத்துனரும் அவரை உதைத்து தாக்கியுள்ளார். இது குறித்து இருவரும் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி வழக்கை முடித்து போலீசார் எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நடத்துனர் தேவன், அரியை தாக்கும் வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
This website uses cookies.