திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி மதுபான பாருக்குள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒத்தக்கை மூர்த்தி (50). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்தார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள மதுபான பாரை எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இன்று காலை அவர் மதுபான பாரில் இருந்தபோது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக முகத்தை சிதைத்து வெட்டிப் படுகொலை செய்தது. இதனை பார்த்தவர்கள் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே, கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகளை கொலையாளிகள் அங்கேயே குப்பையில் வீசி சென்றனர். அதை போலீசார் பறிமுதல் செய்து, கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனால் ஒத்த கை மூர்த்தி கொலை செய்யப்பட்ட பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து உள்ளனர்.
கைதி 2 அப்டேட் தமிழ் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற ரகுமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை…
இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகரும்,ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில்…
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
This website uses cookies.