திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி மதுபான பாருக்குள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒத்தக்கை மூர்த்தி (50). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்தார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள மதுபான பாரை எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இன்று காலை அவர் மதுபான பாரில் இருந்தபோது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக முகத்தை சிதைத்து வெட்டிப் படுகொலை செய்தது. இதனை பார்த்தவர்கள் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே, கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகளை கொலையாளிகள் அங்கேயே குப்பையில் வீசி சென்றனர். அதை போலீசார் பறிமுதல் செய்து, கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனால் ஒத்த கை மூர்த்தி கொலை செய்யப்பட்ட பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து உள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.