திருவள்ளூர் அருகே பூ வியாபாரி வீட்டின் உள்ளே புகுந்து 30 சவரன் தங்க நகைகளை பீரோவில் இருந்து திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே உள்ள பாலேஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் பூ வியாபாரி முனுசாமி. இவரது மனைவி உமாராணி மற்றும் மருமகன் மணிகண்டன் ஆகியோருடன் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகளை அங்கிருந்த சாவியைப் போட்டு திருடி சென்றனர்.
தூங்கி எழுந்து பார்த்தபோது நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பீரோவில் இருந்து நகைகளை திருடி விட்டு நகைகள் வைக்கப்பட்டிருந்த காலி பை மற்றும் நகை இருந்த காலி பெட்டிகளை ஆரணி ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் வீசி சென்று உள்ளனர்.
நகைகளை திருட வந்தவர்கள் மயக்க மருந்து அடித்து அவர்கள் மயக்கம் அடைந்த நிலையில், சாவி போட்டு பீரோவில் இருந்து நகைகளை திருடி சென்றனரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.