திருவள்ளூர் அருகே பூ வியாபாரி வீட்டின் உள்ளே புகுந்து 30 சவரன் தங்க நகைகளை பீரோவில் இருந்து திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே உள்ள பாலேஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் பூ வியாபாரி முனுசாமி. இவரது மனைவி உமாராணி மற்றும் மருமகன் மணிகண்டன் ஆகியோருடன் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகளை அங்கிருந்த சாவியைப் போட்டு திருடி சென்றனர்.
தூங்கி எழுந்து பார்த்தபோது நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பீரோவில் இருந்து நகைகளை திருடி விட்டு நகைகள் வைக்கப்பட்டிருந்த காலி பை மற்றும் நகை இருந்த காலி பெட்டிகளை ஆரணி ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் வீசி சென்று உள்ளனர்.
நகைகளை திருட வந்தவர்கள் மயக்க மருந்து அடித்து அவர்கள் மயக்கம் அடைந்த நிலையில், சாவி போட்டு பீரோவில் இருந்து நகைகளை திருடி சென்றனரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.