திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லை வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக ஆந்திர எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தொடர்ந்து பேருந்துகளில் சோதனை செய்து கடந்த ஏழு நாட்களில் மட்டும் சுமார் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கேட்பாரற்று கிடந்த 11 கஞ்சா பொட்டலங்களையும், மூன்று பாலிதீன் கவர்களில் வைக்கப்பட்டிருந்த 28 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் போலீசாரின் சோதனையை கண்ட கஞ்சா கடத்தல் கும்பல் தப்பித்துச் சென்றதால், கடத்தல் கும்பலை கைது செய்ய முடியவில்லை எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.