திருவள்ளூர் : கும்முடிபூண்டி பேரூராட்சியில் கடந்த 30 ஆண்டு காலமாக வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா அடிப்படை வசதிகளை செய்து தராததால் பேரூராட்சியை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 11 வார்டு மேட்டுதெரு பகுதியில் 28 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டு மனை பட்டா சாலை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- மழை வெள்ள காலங்களில் வீடுகளில் வசிக்க முடியவில்லை. மழைநீர் பாம்பு பூச்சி விஷ ஜந்துக்கள் அதிகம் உள்ளது. எனவே, தங்களை பாதுகாப்பாக வாழ வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து பல ஆண்டுகளாக வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை, எனக் கூறினர்.
பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா ஆகியோருடன் உரிய தீர்வு காண்பதாக காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உறுதி அளித்தும் அவர்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறிய உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
This website uses cookies.