திருவள்ளூர் : கும்முடிபூண்டி பேரூராட்சியில் கடந்த 30 ஆண்டு காலமாக வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா அடிப்படை வசதிகளை செய்து தராததால் பேரூராட்சியை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 11 வார்டு மேட்டுதெரு பகுதியில் 28 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டு மனை பட்டா சாலை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- மழை வெள்ள காலங்களில் வீடுகளில் வசிக்க முடியவில்லை. மழைநீர் பாம்பு பூச்சி விஷ ஜந்துக்கள் அதிகம் உள்ளது. எனவே, தங்களை பாதுகாப்பாக வாழ வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து பல ஆண்டுகளாக வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை, எனக் கூறினர்.
பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா ஆகியோருடன் உரிய தீர்வு காண்பதாக காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உறுதி அளித்தும் அவர்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறிய உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.