திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ்.. இவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென வீட்டின் வெளியே பயங்கர சத்தத்துடன் அவருடைய இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தீ பரவியதில் அருகில் இருந்த காரும் தீப்பற்றி கொண்டு எரிந்தது. இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர், மகிமைராஜ் வீட்டின் அருகே வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பற்றி எரிந்த வாகனங்கள் அருகே பீர் பாட்டில் போன்ற கண்ணாடி துகள்கள் இருப்பதால், பெட்ரோல் குண்டு மூலம் தாக்குதல் நடைபெற்றதா..? முன்விரோதம் காரணமாக இதை செய்தனரா..? என்ற கோணத்தில் சிசிடிவி கேமரா பதிவை சோதனை செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.