திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ்.. இவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென வீட்டின் வெளியே பயங்கர சத்தத்துடன் அவருடைய இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தீ பரவியதில் அருகில் இருந்த காரும் தீப்பற்றி கொண்டு எரிந்தது. இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர், மகிமைராஜ் வீட்டின் அருகே வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பற்றி எரிந்த வாகனங்கள் அருகே பீர் பாட்டில் போன்ற கண்ணாடி துகள்கள் இருப்பதால், பெட்ரோல் குண்டு மூலம் தாக்குதல் நடைபெற்றதா..? முன்விரோதம் காரணமாக இதை செய்தனரா..? என்ற கோணத்தில் சிசிடிவி கேமரா பதிவை சோதனை செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.