திருவள்ளூர் : மீஞ்சூரில் தலைமை காவலர் யுவராஜ் என்பவர் தன்னைத்தானே மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் வசித்து வந்தவர் யுவராஜ் (54). இவரது மனைவியின் பெயர் சாமுண்டீஸ்வரி. இவருக்கு ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் மகனும் உள்ளார். யுவராஜ் எண்ணூர் E4 காவல் நிலையத்தில் தலைமை காவலராக 1997 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. வீட்டில் இருந்த யுவராஜ் யாரும் இல்லாத நேரத்தில் தன் மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட இருந்துள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டார், இவரை அருகில் உள்ள மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவரை பரிசோதித்த டாக்டர், இவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று கூறி விட்டனர்.
இதனை அடுத்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்கு பதிந்து குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.