திருவள்ளூர் அருகே வடிவேல் திரைப்பட காமெடி காட்சி போன்று சுவற்றில் துளை போட்டு அரசு டாஸ்மாக் மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள் இருவரை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைபேட்டை தண்டலசேரி அருகேயுள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையின் சுவற்றில் துளை போட்டு உள்ளே புகுந்த இருவர் மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணிக்கு சென்ற போலீசார், பதிவேடு கையெழுத்திட சென்றபோது மதுபான கடையை சுற்றிப் பார்த்துள்ளனர்.
அப்போது, மதுபான கடையின் சுவற்றின் துளைபோட்டு இருவர் மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார், இருவரையும் கையும் களவுமாக சுவற்றின் வழியாக வெளியேற்றி பிடித்து கைது செய்தனர்.
பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த முனியன் ஆகிய இருவரை கைது செய்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபான கடையில் கொள்ளை அடிக்க வந்த இருவரும் குடித்துவிட்டு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.