திருவள்ளூர் ; கும்மிடிப்பூண்டியில் பேட்டரி திருடனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் அப்பலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரின் விவசாய டிராக்டரிலிருந்து பேட்டரியை மர்ம நபர்கள் தேடிச் சென்றனர். இது குறித்து அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சோழியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்யா (19) என்பவரை கைது செய்தனர்.
மேலும், பேட்டரி திருட்டில் ஈடுபட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த திருப்பாலைவனம் பகுதியை சேர்ந்த கெல்லீஸ் என்கிற விஜி (20) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன் அவன், திட்டமிட்டு ஒருவரை கொலை செய்தது தெரியவந்தது .
பேட்டரி திருடன் விஜியை தாக்கி, வழிபறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவனை ஒரு மாதத்திற்கு முன், அவனுக்கு அடையாளம் தெரிந்துள்ளது. அந்த நபரை திட்டமிட்டு, எளாவூர் அழைத்து சென்று, அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளான். போதை ஏறியதும், சுவற்றில் தலையை அடித்து மயக்கமடைய செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து, விஜியை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர்.
ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலையின் பின்புறம், முட்புதரில் அழுகிய நிலையில் சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார் என்பது விஜிக்கு தெரியாத நிலையில், கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேட்டரி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் திடீர் திருப்பமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது .
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.