திருவள்ளூர் சோழவரம் அருகே எரிகரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரி தண்ணீர் செல்லும் கரையை ஒட்டிய பகுதியில்
நண்பர்களுடன் மது அருந்திய போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆட்டந்தாங்கள் ஔவையார் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்கிற சுப்பிரமணி என்பவரை அரிவாளால் வெட்டி விட்டு, அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ரமேஷை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தனர்.
ரமேஷ் கொலை வழக்கில் அரவிந்த் மற்றும் வினோத் ஆகிய இருவரும் ரமேஷை கத்தி எடுத்து வெட்டியதாகவும், உடன் இருந்தவர்கள் தப்பி ஓடியதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், அரவிந்த், வினோத், வீரராகவன், விஜய், வெங்கடேசன் உள்ளிட்ட ஐந்து பேரை சோழவரம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்ட ஆத்திரத்தில் திட்டமிட்டு வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்தனர் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.