திருவள்ளூர் : திருமணத்திற்கு சென்ற இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் ஜார்ஜ் என்பவர் மகன் ராபின் (23). இவர் தனது நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை பஜாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றுள்ளார்.
திருமணம் முடிந்து வீட்டிற்கு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கமல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, விவேகானந்தா பள்ளி அருகே உள்ள வேகத்தடை அருகே அவரை பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி, அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். நிலைகுலைந்து போன ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்,ராபின் உடன் சென்ற கமல் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருமணத்திற்கு சென்ற நண்பர்கள் யார்…? அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா..? அல்லது முன் விரோதம் காரணமாக இவரை கொலை செய்தனரா…? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன் கொலை கும்பலை தேடி வருகின்றனர்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.