திருவள்ளூர் : திருமணத்திற்கு சென்ற இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் ஜார்ஜ் என்பவர் மகன் ராபின் (23). இவர் தனது நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை பஜாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றுள்ளார்.
திருமணம் முடிந்து வீட்டிற்கு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கமல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, விவேகானந்தா பள்ளி அருகே உள்ள வேகத்தடை அருகே அவரை பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி, அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். நிலைகுலைந்து போன ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்,ராபின் உடன் சென்ற கமல் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருமணத்திற்கு சென்ற நண்பர்கள் யார்…? அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா..? அல்லது முன் விரோதம் காரணமாக இவரை கொலை செய்தனரா…? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன் கொலை கும்பலை தேடி வருகின்றனர்.
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
This website uses cookies.