திருவண்ணாமலை ; செங்கம் அருகே பள்ளி கட்டிடம் இல்லாமல் கோவில் இடுக்கில் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் ஊராட்சி அண்டபேட்டை பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கட்டிடம் இல்லாததால் கோவில் இடுக்கில் அமர்ந்த படிக்கும் அவலநிலை உருவாகி உள்ளது. மேல்கரியமங்கலம் ஊராட்சி அண்டபேட்டை பகுதியில் 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 20 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த கல்வி ஆண்டின் கோடை விடுமுறைக்கு முன்பே அங்கு இயங்கி வந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட பணிகள் நடைபெற்றது. அப்போது, தனிநபர் வீட்டில் மாணவ, மாணவிகளை அமர வைத்து ஆசிரியர் பாடம் நடத்தி வந்தார். இந்த கல்வி ஆண்டில் தனி நபர் வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்த இடம் அளிக்கப்படாததால், மரத்தடியிலும் கோவில் சந்து இடுக்கிலும் ஆசிரியர் மாணவர்களை அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
தற்போது, நடைபெற்று வரும் புதிய பள்ளி கட்டிடப் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களுக்கு பாதுகாப்பான கட்டிடத்தில் அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் முறையிட்டும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இதுவரையிலும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை தற்காலிக கட்டிடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.