இரவில் குடிபோதையில் காவல்துறை தடுப்பு வேலிகளை இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்து தள்ளி கீழே விழுந்த அகில பாரத இந்து மகா சபை மாவட்ட தலைவரின் அட்ராசிட்டி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை அகில பாரத இந்து மகா சபா மாவட்ட தலைவராக ஆர்.ஜி.வாசுதேவன் உள்ளார். நேற்று நள்ளிரவு திருவண்ணாமலை கோபுர தெருவில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை முழு போதையில் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்து தள்ளி தலைக்குப்பர குடி போதையில் கீழே விழுந்துள்ளார்.
மேலும், அதே தெருவில் அண்ணாமலையார் கோயில் தெற்கு வாசல் பகுதிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த காவல் துறையினரின் தடுப்பு வேலியை முழு போதையில் கீழே தள்ள முயலும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, இவர் அடுத்த மாதம் மதுரையில் அகில பாரத இந்து மகா சபா நடத்தும் ஒன்பதாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் தலைமையேற்று கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
முழு போதையில் வாசுதேவன் செய்த அட்ராசிட்டி சம்பவ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.