Categories: தமிழகம்

பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி… மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு… விசாரணை நடத்த உத்தரவு

திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில், சிகிச்சையில் இருந்த இளம்பெண் உயிரிழந்தார். அதன் காரணமாக உறவினர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

திருவாரூர் அருகே தேவர்கண்ட நல்லூரை சேர்ந்தவர் அப்துல் ஜாபர். இவரது மகள் பர்வீன் பானு (23) என்பவருக்கும், கும்பகோணத்தை சேர்ந்த பரக்கத்துல்லா என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பர்வீன் பானு தனது முதல் பிரசவத்திற்காக தேவர்கண்டநல்லூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்திருந்தார்.

கடந்த 7 ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பர்வீன் பானுவுக்கு 11ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில், பர்வீன் பானு தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார். இன்று காலை 7 மணி அளவில் பர்வீன் பானு தனக்கு மயக்கம் வருவதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, உறவினர்கள் உடனடியாக அங்கு பணியில் இருந்த செவிலியரிடம் இது குறித்து கூறி உள்ளனர். அதற்கு செவிலியர் மருத்துவர் இன்னும் வரவில்லை, வந்தவுடன் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பர் அதுவரை பொறுத்திருக்கவும் என்று கூறியுள்ளனர்.

செய்வதறியாது திகைத்த உறவினர்கள் அருகில் உள்ள அறையில் இருந்த மற்றொரு செவிலியரிடம் இது குறித்து கூறி உள்ளனர். அந்த செவிலியர் அருகில் உள்ள செவிலியர் தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே பர்வீன் பானு தனது படுக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கோபமுற்ற உறவினர்கள் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியதால் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து திருவாரூர் டிஎஸ்பி சிவராமன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், உறவினர்கள் இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வுகாக அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் ஜோசப் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.  

இது குறித்து அவர் கூறுகையில், “உயிரிழந்த பெண்ணிற்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மயக்கம் ஏற்படும்போது உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியில் இருந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இது குறித்து மருத்துவ கல்லூரி துணை முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…

4 minutes ago

அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…

1 hour ago

மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…

2 hours ago

என்னைய மறந்துட்டாங்க…புலம்பும் விஜய் பட வில்லன்..!

இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…

2 hours ago

’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…

2 hours ago

உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?

துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…

3 hours ago

This website uses cookies.