திருவாரூர் : அரசு நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசின் ஆட்சியர் பங்கு பெறும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பயனாளிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 248 பயனாளிகளுக்கு சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும்போதே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார்.
அருகாமையில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு நாற்காலியில் அமர வைத்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நிகழ்ச்சியின் பாதியிலேயே தனது முகாம் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது. அரசு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மயங்கி விழுந்தது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.