திருவாரூரில் சீனியர் மாணவனை கல்லூரி பேருந்தில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கிய ஜூனியர் மாணவர்களின் பரபரப்பு காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டிணத்தில் இயங்கி வரும் ஈஜிஎஸ் பிள்ளை கலை மற்றும அறிவியல் கல்லூரியில் மன்னார்குடி சவளக்காரன் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (பெயர் மாற்றம்) என்பவர் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் திருவாரூர் அருகே உள்ள மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் பிகாம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றனர்.
இந்த ஐந்து மாணவர்களும் கல்லூரி பேருந்தில் தினந்தோறும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சந்தோஷ், கல்லூரி பேருந்தில் ஏறும்போது, அந்த 4 மாணவர்களும் ஆகியோர் கால்களை நீட்டி அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பர்வீன் குமார், ஏன் கால்களை நீட்டி இருக்கிறீர்கள் ப்ரோ..? என்று கேட்டதற்கு வாக்குவாதம் முற்றி, “சீனியர்னா நீ என்ன பெரிய ஆளா…? மன்னார்குடிக்காரனா நீ என்ன பெரிய ஆளா..? என்று கேட்டு பேருந்தின் கடைசியில் வைத்து நால்வரும் சேர்ந்து பர்வீன் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், திருவாரூர் அருகே உள்ள வாழவாய்க்கால் பகுதியில் உன்னை பேருந்தில் இருந்து இறக்கி அடிப்போம் என்று ஜூனியர் மாணவர்கள் நால்வரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, பயந்து போன சந்தோஷ் தனது அண்ணனுக்கு தகவல் தெரிவித்து அவரை வாழ வாய்க்காவில் காத்திருக்கும் படி கூறுகிறார்.
இந்த நிலையில், பேருந்து வாழ வாய்க்கால் வந்ததும், ஜூனியர் மாணவர்கள் சந்தோஷை பேருந்தில் இருந்து இறக்கி தாக்க தொடங்குகின்றனர். தடுக்க வந்த அவரது அண்ணனையும் சரமாரியாக அந்த மாணவர்கள் தாக்குகின்றனர். இதனை பேருந்தில் இருந்த சக மாணவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது குறித்து சந்தோஷ் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் நேற்று மாலையே புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சந்தோஷ் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கல்லூரி பேருந்தில் பயணித்த சீனியர் மாணவனை பேராசிரியர்கள் சக மாணவ, மாணவிகள் முன்பே கல்லூரி பேருந்தில் இருந்து இறக்கி ஜூனியர் மாணவர்கள் தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.