திருவாரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வகுப்பறை பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம். திருவாரூரில் அமைந்துள்ள இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளி.
இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தற்போது, இந்த பள்ளியில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில் உள்ள ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் அந்தந்த வகுப்பு பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியில் எழுதப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்பட்டு அடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபொழுது, வகுப்பறை மாற்றம் காரணமாக வகுப்பறை பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. விரைவாக தமிழ் மொழியிலும் வகுப்பறை பெயர்கள் எழுதப்படும், என தெரிவித்தார். தமிழ் மொழியை நாங்கள் புறக்கணிக்கவில்லை என தெரிவித்தார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.