மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் இடி விழுந்து தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை காலனி பகுதியை சேர்ந்த அன்பரசு, அவரது மகன் அருள்முருகன் இருவரும் நேற்று நள்ளிரவு அவர்களுக்கு சொந்தமான வயலில் மழையால் தேங்கி நிற்கும் நீரை வடிய வைப்பதற்காக சென்றனர்.
மகன் அருள் முருகன் வயலில் தண்ணீரை வடியவைத்த போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியது. அப்போது, அவரது தந்தை அன்பரசு அருகில் நின்றதால், அவர் மீதும் மின்னல் தாக்கி, தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலை வயலுக்கு வேலை சென்றவர்கள் வயலில் இருவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடுவூர் போலீசார் மின்னல் தாக்கி உயிரிழந்த இருவரும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த அருள் முருகனுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், மின்னல் தாக்கி தந்தையுடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் தளிக்கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.