மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் இடி விழுந்து தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை காலனி பகுதியை சேர்ந்த அன்பரசு, அவரது மகன் அருள்முருகன் இருவரும் நேற்று நள்ளிரவு அவர்களுக்கு சொந்தமான வயலில் மழையால் தேங்கி நிற்கும் நீரை வடிய வைப்பதற்காக சென்றனர்.
மகன் அருள் முருகன் வயலில் தண்ணீரை வடியவைத்த போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியது. அப்போது, அவரது தந்தை அன்பரசு அருகில் நின்றதால், அவர் மீதும் மின்னல் தாக்கி, தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலை வயலுக்கு வேலை சென்றவர்கள் வயலில் இருவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடுவூர் போலீசார் மின்னல் தாக்கி உயிரிழந்த இருவரும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த அருள் முருகனுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், மின்னல் தாக்கி தந்தையுடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் தளிக்கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.