நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கால்நடை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட வண்டாம்பாளை ஸ்ரீ சிவசக்தி நகரில் வசித்து வரும் சாமிநாதன் என்பவரின் மகன் பிரபுதாஸ் (42). இவர் கால்நடைகளுக்கு தனியார் செயற்கை முறை கருவூட்டல் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், பிரபுதாஸ் பணிக்கு சென்ற பொழுது நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் பிரபுதாஸ் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அதே போன்று, திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள புனவாசல் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகன் கோபி (25) வெல்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். ரைஸ்மில் கட்டுமான பணியில் வெல்டராக பணிபுரிய வெளியூரில் சென்று வேலை பார்த்து வந்த அவர். இரண்டு வார விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ள 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி. கோபி ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெண்ணின் தாயார் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபியை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.