திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் அருகே காவலர் மீது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரித்துவார் மங்கலம் கடைத்தெரு பகுதியில் கத்தியை வைத்துக்கொண்டு அலம்பல் செய்த 24 வயது உடைய சூரியா என்ற வாலிபர் குறித்து பொதுமக்கள் அரித்துவார் மங்கலம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்டு அங்கு வந்த காவலர் மணிகண்டன் சூர்யாவை வீட்டுக்குப் போகும்படி கூறியுள்ளார்.
அப்போது, “என்னை கேட்க நீ யார்..?” என்று தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து உள்ளார் சூர்யா. பின்னர், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காவலர் மணிகண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.