திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் அருகே காவலர் மீது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரித்துவார் மங்கலம் கடைத்தெரு பகுதியில் கத்தியை வைத்துக்கொண்டு அலம்பல் செய்த 24 வயது உடைய சூரியா என்ற வாலிபர் குறித்து பொதுமக்கள் அரித்துவார் மங்கலம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்டு அங்கு வந்த காவலர் மணிகண்டன் சூர்யாவை வீட்டுக்குப் போகும்படி கூறியுள்ளார்.
அப்போது, “என்னை கேட்க நீ யார்..?” என்று தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து உள்ளார் சூர்யா. பின்னர், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காவலர் மணிகண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.