Categories: தமிழகம்

இந்துக்கள்னா வேசி? பஸ்னா ஓசி? கேட்டால் TAKE IT EASY.. இது தான் திமுக POLICY : பாஜக பிரமுகர் விமர்சனம்!!

தி.மு.க. அமைச்சர்கள் இந்துக்கள் என்றால் வேசி என்கிறார்கள், பஸ்சில் சென்றால் ஓசி என்கிறார்கள், இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் டேக் இட் ஈசி என்கிறார்கள் என பதஜக மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத், அவர் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை திடீரென சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு அவரது திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டித்தருவோம் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போதே குறிப்பிட்டார்.

ஆட்சிக்கு வந்த 3 மாதங்களுக்கு பிறகு விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால் 1½ ஆண்டுகள் உருண்டோடி விட்டது, அதற்காக என்ன செய்தார் என்றே தெரியவில்லை. இங்கிருக்கிற பொன்முடி, இடம் பார்ப்பதாக சொல்லி 20 கார்களுடன் சென்று விளம்பரப்படுத்திக்கொண்டார். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கான காரணம் அரசியலாகக்கூட இருக்கலாம். நிச்சயம் அதை நிறைவேற்றுவோர் என்று நம்புகிறோம் என்றார்.

மேலும் பேசிய அவர் தி.மு.க. அமைச்சர்கள் இந்துக்கள் என்றால் வேசி என்கிறார்கள், பஸ்சில் சென்றால் ஓசி என்கிறார்கள், இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் டேக்கிட் டீசி என்கிறார்கள்.

மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க.வில் இருந்த மூத்த தலைவர்கள் என்றைக்காவது இதுபோன்று பேசியது உண்டா? இதுபோன்று அவதூறான வார்த்தைகளை உச்சரிக்கக்கூடாது என்று ஸ்டாலின், தனது சகாக்களுக்கு கட்டளையிட வேண்டும்.

அவர் கண்டிக்கத்தவறினால் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள், அது தேர்தலாக இருக்கலாம், அல்லது போராட்டமாகவும் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தன்மையை புரிந்துகொள்ளாதவர்கள் ஏதேதோ பேசுகிறார்கள். அந்த இயக்கம் பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்க்க உருவாக்கப்பட்ட இயக்கம்.

சுதந்திரத்திற்கு முன்பு எதைச்சொன்னார்களோ அதைத்தான் இன்றும் சொல்கிறார்கள். அது தேசிய இயக்கம், புனிதமான இயக்கம். இதையெல்லாம் ஸ்டாலின் புரிந்துகொள்வார் என்று நம்புகிறோம்.

எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்ச்சியை ஸ்டாலினே தொடங்கி வைப்பார். விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவில் அவரது மகன் என்ற முறையில் நான் கலந்துகொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

11 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

12 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

13 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

14 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

15 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

16 hours ago

This website uses cookies.