100 ஆண்டு கால சட்டப்பேரவை வரலாற்றில் சபாநாயகருக்கு மொழிப்பெயர்க்க ஏதுவாக முதல்முறையாக பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆங்கிலேய ஆட்சியர்கள் உருவாக்கிய பல்வேறு நிர்வாக அமைப்புகளில் சட்டப்பேரவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1919ம் ஆண்டு இயற்றப்பட்ட அதிகாரப் பகிர்வு சட்டத்தின்படி உருவான சென்னை மாகாண சட்டப்பேரவையின் நீட்சியே தற்போதைய தமிழக சட்டப்பேரவை ஆகும்.
இந்தியா சுதந்திரமடைந்த பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், சில நிர்வாக நடவடிக்கைகளில் ஆங்கிலேயர் வகுத்த சில நிர்வாக நடைமுறைகள் தொடர்கின்றன.
1922ம் ஆண்டில் வெலிங்டன் பிரபு அன்பளிப்பாக கொடுத்த நாற்காலியில், பெருங்காவூர் ராஜகோபாலச்சாரி முதல் தற்போதை சபாநாயகர் அப்பாவு வரை அமர்ந்து அவையை வழி நடத்துகின்றனர்.
அவர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட துபாஷிக்கள் தனி சீருடையுடன் உள்ளனர். நூறாண்டுகளாக ஆண்கள் மட்டுமே இந்த பணியில் தற்போது ராஜலட்சுமி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1900ம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமிக்கு தற்போது 60 வயது. வரும் மே மாதம் ஓய்வு பெறும் வரை இந்த பணியில் ராஜலட்சுமி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.