Categories: தமிழகம்

திராவிட இயக்கங்களை அழிக்க நினைக்கிறார்கள்… சனாதன சக்திகளை ஊடுருவாமல் காப்பாற்ற இதுதான் வழி : வைகோ பரபர!!

மதிமுக சார்பில் மதுரையில் நடத்தப்படவுள்ள அறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாடு தொடர்பாக, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். மாநாட்டுக்காக வசூலிக்கப்பட்ட நிதியை வைகோவிடம் நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

கூட்டத்தில் வைகோ பேசுகையில், “கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி துவங்குவேன் என்றோ, அதை இத்தனை ஆண்டுகள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரையும் கொடுக்க துணிந்து தான் திமுகவில் பணியாற்றினேன். கலைஞருக்கு தம்பியாக இருந்தேன்.
திமுகவுக்கு என்னை ஒப்புக்கொடுத்த பின்னர் 23 முறை சிறை சென்றிருக்கிறேன். கலைஞருக்காக நான் செய்த செயல்களை பார்த்து அவர் கண் கலங்கியிருக்கிறார்.

கலைஞர் உடல்நலம் குறைந்த காலத்தில் தான் சனாதன இந்துத்துதுவா சக்திகள் திராவிட இயக்கங்களை அழித்துவிட நினைத்தார்கள். வாஜ்பாய் மறைவிற்கு பிறகு தீவிரமாக அழிக்க நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை இங்கு கொண்டு வந்து வைத்து திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கிறார்கள்.

அரசியலுக்கு நான் வந்து 50 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் எத்தனை ஆண்டுகள் இருப்பேன் என தெரியாது. (குரல் உடைந்து கண் கலங்கினார்).
ஸ்டெர்லைட் நிறுவனர் அனில் அகர்வால் அரை மணி நேரம் என்னை தனியாக சந்திக்க வேண்டும் என்றார். நான் 5 நொடி கூட சந்திக்க முடியாது என்று மறுத்தேன். மதிமுக தொண்டனுக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதற்காக நான் அவரை சந்திக்கவில்லை.
மதிமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். ஸ்டெர்லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரியாறு அணையை பாதுகாத்தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப்படி எவ்வளவோ செய்துள்ளோம்.

10 ஆண்டுகளுக்கு முன்னால் பாஜக என்றால் யாருக்காவது தெரியுமா?
இன்று அது மோடி, அமித்ஷா ஆதரவுடன் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிறார்கள். அந்த தைரியம் எப்படி வந்தது? தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால், சனதான சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க திமுகவுடன் கரம் கோர்த்துக் கொள்வோம். விமர்சனங்கள் எவ்வளவோ வரலாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

அன்று நான் பல நடைபயணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது.
நான் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியதில்லை. சாலையில் படுத்திருந்தேன். ஆனால், இன்று நடைபயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது.

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக என் மீது தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. அந்த வழக்கில் எனக்கு தண்டனை கிடைத்தாலும் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.

என்னுடைய வீட்டிலிருந்து யாரும் அரசியலுக்கு வர வேண்டும் என நான் நினைக்கவில்லை. என் மனைவியின் அண்ணன் மகன் தீக்குளித்து இறந்து போனான். அது சாதாரண காரியமல்ல. ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் தீக்குளித்து இறந்து போகிறார் என்றால் அந்த குடும்பம் திராவிட இயக்கத்திற்கு அவ்வளவு பாடுபட்டிருக்கிறது என்று பொருள்.

சனாதன சக்திகளை தடுக்க நாம் திமுகவை பாதுகாக்க வேண்டும். திராவிட இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். அதற்காக போராட வேண்டும்” என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

15 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

16 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

17 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

17 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

17 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

19 hours ago

This website uses cookies.