துத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே கே.கைலாசபுரத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது கே.கைலாசபுரம். மேலும், கீழக்கோட்டை ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவராக சுமார் 50 வருடங்களாக கே.கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராக உள்ளார். மேலும் பஞ்சாயத்து அலுவலகம் ஆனது கே.கைலாசபுரத்தில் இருந்து வருகிறது.
தற்போது பஞ்சாயத்து அலுவலகம் ஆனது பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், புதிய பஞ்சாயத்து அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதை கீழக்கோட்டை கிராமத்தில் அமைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு கே.கைலாசபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இது தொடர்பாக சிறு சிறு பிரச்சனைகளும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே பயிற்சி கபாடி போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கீழக்கோட்டை கிராமத்தில் வைத்து நடந்துள்ளது. அப்போது, இரு அணியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டு முன் பகை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கே கைலாசபுரம் சந்தி மரிச்சம்மன் கோவில் அருகே கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் கே. கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் (18) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், பிரித், அஜய், சிவபாரத் மற்றும் கீழக்கோட்டையைச் சேர்ந்த சண்முகவேல், துரைராஜ் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கீழக்கோட்டையைச் சேர்ந்த சண்முகவேல், துரைராஜ் உள்ளிட்ட 15 நபர்கள் மீதும், சண்முகவேல் அளித்த புகாரின் பேரில் கீர்த்தி வாசன், அஜய் பிரித், கார்த்திக் உள்ளிட்ட 18 நபர்கள் மீதும் நாரைக்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் மணியாச்சி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.