தூத்துக்குடி அருகே கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இரண்டே கால் வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மேற்கு காமராஜ் நகர் பகுதியை சார்ந்த ஸ்டெபி (28). இவரது முதல் கணவர் கிஷோர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு கேத்ரினா என்னும் 2 1/4 வயது மற்றும் கிறிஸ்டினா (5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமண தகவல் மையம் மூலமாக டேவிட் (32) என்பவருடன் திருமணமாகி உள்ளது. டேவிட் தூத்துக்குடியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் டேவிட்டுக்கு ஸ்டெபிக்கு இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு குடி போதையில் வந்த டேவிட் ஸ்டேபியிடம் தகராறு செய்து சண்டை போட்டுள்ளார். இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஸ்டெபியை கடுமையாக தாக்கியுள்ளார். அப்பொழுது தொட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஸ்டெபியின் இரண்டாவது பெண் கேத்ரீனா 2 1/4 வயது குழந்தையை சுவற்றில் அடித்ததில், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது.
இதை தொடர்ந்து, அவர்களின் குக்குரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி இறந்து கிடந்த பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பலத்த காயமடைந்த ஸ்டேபியை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்டை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.