தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது… தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்து வலது கையில் எலும்பு முறிவு

Author: Babu Lakshmanan
20 May 2024, 10:04 pm
Quick Share

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி, தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த மாரிக்குமார் (33) என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையின் சரக்கு வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று சரக்கு வாகனத்தில் தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: மவோயிஸ்ட்டுகள் கூட திருந்திடுவாங்க… ஆனா, இந்த RSS-காரங்க திருந்த மாட்டாங்க ; செல்வப்பெருந்தகை!!

இதுகுறித்து மாரிக்குமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த காத்தான் என்ற கார்லின் (24) தனது கூட்டாளியுடன் சேர்ந்து மாரிக்குமாரை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த ரொக்க பணம் ரூ.9,400 பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் உடனடியாக 24 மணிநேரத்தில் கார்லினை கைது செய்து, அவரிடமிருந்த பணம் ரூ.3160 பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பணப்பறிப்பில் ஈடுபட்டதும், அதன் பிறகு யாரிடமும் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க தங்களது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது சாலையிலிருந்த வேகத்தடையில் தடுமாறி சறுக்கி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

Views: - 296

0

0