திமுக எம்பி ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக எம்பி ஆ.ராசாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூரில் இது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த நிலையில், திமுக எம்பி ஆ.ராசா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி, கழக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை வழிகாட்டுதலின்படி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டனிஸ் பிரபு தலைமையில் தூத்துக்குடி தென்பாக காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆ. ராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர் பேசியதை பதிவேற்றம் செய்த யூடியூப் சேனல்களில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன்படி யூடியூப்பில் இருந்து அந்த வீடியோவை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.