திமுக எம்பி ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக எம்பி ஆ.ராசாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூரில் இது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த நிலையில், திமுக எம்பி ஆ.ராசா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி, கழக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை வழிகாட்டுதலின்படி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டனிஸ் பிரபு தலைமையில் தூத்துக்குடி தென்பாக காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆ. ராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர் பேசியதை பதிவேற்றம் செய்த யூடியூப் சேனல்களில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன்படி யூடியூப்பில் இருந்து அந்த வீடியோவை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.