தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து சங்கு குழி படகுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் மீனவர். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் நேற்று காலை கடலுக்குச் சென்று விட்டு படகை மேட்டுப்பட்டி கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், இவரது படகில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான முனீஸ்வரனுக்கு சொந்தமான நாட்டுப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமானது. இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ஏராளமான மீனவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பட்டி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் படகு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் சுமார் 300-க்கும் மேற்பட்ட சங்கு குழி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.