தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தை whats app மூலம் ஏமாற்றி 36,98,800 பணத்தை சுருட்டிய நைஜீரியா நாட்டை சேர்ந்த நபரை கைது செய்தனர்.
தூத்துக்குடி, ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பணிமய காட்வின் மனோஜ் (38), இவர் தூத்துக்குடியில், கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், தூத்துக்குடி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், வாட்ஸ் அப் மூலம் டோகோவில் இருக்கும் வெடிஸ் அனிமல் ஹெல்த் இண்டஸ்ட்ரி (vetis Animal Health industry) என்ற நிறுவனத்திற்கு மருந்து ஏற்றமதி செய்ய இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சர்மா எண்டர்பிரைசஸ் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணா இண்டஸ்ட்ரீயில் இருந்து பெற்று வெட்டிஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யுமாறு கேட்டதை நம்பி மொத்தம் 36 லட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த இசி பெடலிஸ் நுடுபுசி (Ese fidelis ndubuisi) என்பவர் வாட்ஸ் அப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்து போலியான whatsapp எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படையினர் 29.12.2022-ம் தேதி மும்பையில் உள்ள உள்வே நோட் என்ற பகுதியில் நைஜீரிய நாட்டை சேர்ந்த அவரை வீட்டில் கைது செய்தனர்.
பின்னர், சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவர் பல நபர்களை ஏமாற்றியுள்ளது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், பலர் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.