தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து; தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து 8மணி அளவில் கோயம்புத்தூரை நோக்கி எஸ் பி எஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
பெருந்தை காயாமொழி குமாரசாமி புரம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டோல்கேட் பகுதியை இரவு 10 மணி அளவில் தாண்டி சென்று கொண்டிருந்தது.
அப்போது மின் கசிவு காரணமாக பேருந்தில் இருந்து தீப்பொறி வந்துள்ளது. இதை அடுத்து டிரைவர் ஓரமாக நிறுத்தி பார்த்த பொழுது, தீ மளமளவென பரவ தொடங்கியதை அடுத்து, பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பயணிகள் அனைவரையும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.
மேலும் பேருந்து முழுவதும் பற்றி எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையானது. தீ விபத்து குறித்து சிப்காட் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.