தூத்துக்குடி அருகே மது குடிக்க பணம் தராததால் தந்தையை கல்லால் தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள மாங்கொட்டாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவன் மகன் பண்டாரம் (69), விவசாயி. இவருக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரே மகன் வேல்முருகன் (25) என்பவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு பண்டாரம் மாங்கொட்டாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, வேல்முருகன் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர் கருங்கல்லை தந்தையின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து ஏரல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப் பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.