குமரி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அர்பணிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாடகைக்கு எடுத்து ஸ்டிக்கர் ஒட்டி நிர்வாகிகள் நடத்திய விளம்பர நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது.
வடகிழக்கு பருவ மழையின் போது தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லை தூத்துகுடி மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளானது.பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நடிகர் விஜய் நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் மத்திய மாவட்ட தலைவர் சபின் சார்பில் நிவாரண பொருட்களும் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனமும் வழங்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் சேவையை.புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார் தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ் அந்த பகுதியில் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்கிய நிலையில் மாயமானது இது குறித்து நெல்லை தூத்துக்குடி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்ட போது முறையான தகவல் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அர்பணிக்கப்பட அதே பதிவெண் கொண்ட ஆம்புலன்ஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் காருண்யா ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மற்ற நிர்வாகிகள் விசாரணையில் இறங்கிய போது அந்த ஆம்புலன்ஸ் ஐ குமரி மத்திய மாவட்ட தலைவர் சபின் தொண்டர் கிருஷ்ணகுமார் என்பவர் மூலம் சுனில் என்பவரிடம் வாடகைக்கு எடுத்து வந்து தளபதி விஜய் மக்கள் இயக்கம் என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரத்திற்காக நெல்லை தூத்துக்குடி மக்கள் சேவைக்கு அர்பணிப்பது போல புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடங்கி வைத்து நாடகமாடியதும்.
அந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சுனில் என்பவர் ஆம்புலன்ஸை இது போல் இயக்கங்களுக்கு விளம்பரத்திற்காக ஸ்டிக்கர்களை மாற்றி ஒட்டி ஆம்புலன்ஸ் ஐ இயக்கி வந்ததும் தெரியவந்த நிலையில் நாடக சம்பவம் குறித்து நிர்வாகிகள் தலைமைக்கு புகாரும் அனுப்பி உள்ள நிலையில் இது சம்பந்தமான உரையாடல் ஆடியோவும் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆம்புலன்ஸ் விளம்பர நாடகம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.