தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மலர்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தாலும், பூக்களை வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு மலர்சந்தையில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு மலர்சந்தையில் நேற்று வரை 500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த கனகாம்பரம் வரத்து குறைவால் மூன்று மடங்கு உயர்ந்து 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், 600க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ கிலோ 1200 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்களும் கிலோ 1200 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ கிலோ 200 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது, 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோஸ் கிலோ 150 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவு காரணமாக அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்துவரும் நிலையிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.
தொடர்ந்து தூத்துக்குடியில் காய்கறி மார்கெட்டில் பரவலாக மக்கள் பொருட்கள் வாங்கி சென்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.