தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழந்துள்ளதால் உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் நகர்ப்புறங்களை வெள்ள நீர் சூழந்தது. மேலும், குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், வெளியே வர முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்ததால் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழு இன்று ஆய்வு செய்தது. தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை இன்னமும் வெள்ளத்தில் இருந்து மீண்டு வரவில்லை. வெள்ள நீர் இன்னும் வடியாததால் போதிய இடவசதியில்லாமல், உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்றுக்கும் மேற்பட்ட உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.