தஞ்சை ; ஶ்ரீவைகுண்டம் அருகே ஏரல் ஹோட்டலில் நடந்த தகராறில் சப்ளையர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த ராசு என்பவரது மகன் சேகர் (64). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பஸ்நிலையத்தில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். அதே ஹோட்டலில் களக்காடு பகுதியை சேர்ந்த சிவசூரியன் (25) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஹோட்டலிலேயே இரவு நேரத்தில் தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், சிவசூரியன் நேற்று நள்ளிரவில் மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்ததால் சேகர் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசூரியன் அங்கிருந்த கம்பால் சேகரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேகர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மதுபோதையில் இருந்த சிவசூரியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.