தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி நீதிமன்றத்தில் பணிகளை முடித்துவிட்டு சோரீஸ்வரத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் வந்த வழக்கறிஞர் முத்துக்குமாரை அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சராசரியாக வெட்டி கொலை செய்தது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட இறந்த வழக்கறிஞர் முத்துக்குமாருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது சகோதரர் சிவக்குமார் என்பவர் தெற்கு காவல் நிலையம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று இவரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலை வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.