தூத்துக்குடி முள்ளக்காடு அருகே தாயுடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த மகன்கள், உப்பள தொழிலாளியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உப்பள தொழிலாளி முனியசாமி. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் முனியசாமிக்கும், அதே பகுதியில் வசித்து வந்த கணவனை இழந்த நிர்மலா என்ற பெண்ணிற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தொடர்பு நிர்மலாவின் மகன்களான சதீஷ் மற்றும் சுதாகருக்கு தெரிய வர, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முனியசாமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் முனியசாமி தொடர்ந்து நிர்மலாவை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், முனியசாமி நேற்று மாலை தனது சைக்கிளில் சாமி நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கே வந்த சதீஷ் மற்றும் சுதாகர், முனியசாமியை சைக்கிளிலிருந்து கீழே தள்ளி அவரது கழுத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே முனியசாமி பரிதாபமாக இருந்தார்.
இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல்துறையினர் முனியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முனியசாமி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் கூடிய முனிசாமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் பல்வேறு போதைகள் காரணமாக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறினார்கள்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.