Categories: தமிழகம்

ஒரு ஆம்லெட்டுக்காக நடந்த கொலை.. மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது; 6 குழந்தைகள் பரிதவிக்கும் அவலம்..!!

தூத்துக்குடி ; கல்பாக்கம் அருகே ஆம்லெட்க்-காக மதுபோதையில் மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டார். தந்தை கொலை செய்யப்பட்டதால் 6 குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஐந்துகாணி இருளர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் (30). இவரது தங்கை கஸ்தூரி என்பவரின் கணவர் முருகன் (32), இருவரும் தினக்கூலி வேலைக்கு செல்லுதல், பகுதி நேர வேலையாக காகிதம், பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்கி காயலான் கடைக்கு கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் செய்து வருகின்றனர். மாமன்-மச்சான் உறவு முறையை சேர்ந்த இருவரும் சம்பாதிக்கும் பணத்தில் மது அருந்துவது வழக்கமாம்.

கல்பாக்கம் – புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கார் ஷோரூம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் செல்லப்பன் – முருகன் இருவரும் தாங்கள் வாங்கி மதுவை குடித்துள்ளனர். அப்போது, செல்லப்பன் மதுவுடன் சைடிஷ் ஆக சாப்பிடுவதற்காக இரண்டு ஆம்லெட் வாங்கி வந்துள்ளார். அதை முருகன எடுத்து சாப்பிட்டுவிட்டதாக கூறப்பகிறது. அதனால், இருவருக்கும் இடையே வாயத்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

இந்நிலையில், முழு குடி போதையில் இருந்த முருகன் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து செல்லப்பனை உருட்டு கட்டையால் தாக்கியதில் தலையில் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். பின்னர், இதுகுறித்து வாயலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஐந்துகாணி அப்துல்உசேன் இக்கொலை சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து புகார் செய்தார்.

பிறகு புகாரின் பேரில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் உத்தரவின்பேரில், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்டோனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ரத்த வெள்த்தில் இறந்து கிடந்த செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு, அங்கேயே குடிபோதையில் நிதானமின்றி படுத்து கிடந்த முருகனை கைது செய்து இக்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செல்லப்பனுக்கு மாரி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர்.

குறிப்பாக, கடந்த 8 மாதத்திற்கு முன்பு செல்லப்பன் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 2 குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு ஆம்லெட்டுக்காக தனது கணவர் கொலை செய்யப்பட்டு, தற்போது 6 குழந்தைகளும் அனாதையாக நிற்கும் மனைவி மாரி 6 குழந்தைகளையும் எப்படி வளர்ப்பேன் என கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

குறிப்பாக, 6 குழந்தைகளில் வளர்ந்து நிற்கும் 4 குழந்தைகளும் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆம்லெட்டுக்காக நடந்துள்ள இக்கொலை சம்பவம் வாயலூர் ஐந்துகாணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொலையாளி முருகனின் மனைவி கஸ்தூரி (செல்லப்பன் தங்கை) 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் ஒன்றில் இறந்துவிட்டதாகவும், அவரது 2 பிள்ளைகள் தாம்பரத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2-வது திருமணம் செய்து கொள்ளாமல் தன்னந்தனியாக வசித்து வரும் முருகன் தினமும் சம்பாதிக்கும் பணத்தில் ஊதாரித்தனமாக ஒரு பொறுப்பிள்ளாமல் சுற்றி வந்து தினமும் மதுபோதைக்கு அடிமையாகி இக்கொலை சம்பவத்தில் அவரை ஈடுபட வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

35 minutes ago

திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ

எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

38 minutes ago

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

1 hour ago

வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!

சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…

1 hour ago

வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…

யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…

2 hours ago

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

3 hours ago

This website uses cookies.