தூத்துக்குடியில் முன்னாள் குமாஸ்தா தலை துண்டித்து படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளை சினிமா காட்சி போல விரட்டி சென்று தனிப்படை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு பழைய தொழிற்பேட்டை உள்ளே 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நள்ளிரவு மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
மேலும் படிக்க: வார இறுதியில் சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம்… சவரனுக்கு ரூ.160 குறைவு…!!
அங்கு தூத்துக்குடி குருஸ்புரத்தைச் சேர்ந்த முன்னாள் குமாஸ்தாவாகவும், தற்போது நில புரோகராகவும் இருந்து வரும் பால்ராஜ் (60) கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, எஸ்.பியின் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அவர்களை தூத்துக்குடி நெல்லை பைபாஸ் சாலையில், அதிகாலை வேளையில் போலீஸ் வாகனத்தில் விரட்டிச் சென்றனர்.
சினிமா காட்சி போல இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை பின் தொடர்ந்து நீண்ட நேரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். போலீசார் தங்களை விரட்டி வருவதை அறிந்து அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலையில் சறுக்கி விழுந்ததில் அவர்களுக்கு கை முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி முத்து கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த கந்தசுப்பிரமணியன் மற்றும் தூத்துக்குடியில் வசித்து வரும் மதுரையை சேர்ந்த ஜெயராம் என்பது தெரிய வந்தது. இவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பால்ராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது.
இந்தக் கொலையில் இவர்கள் இருவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? கொலைக்கான காரணம் இது மட்டும்தானா..! என்பது குறித்து தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
This website uses cookies.