தூத்துக்குடி : எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் (28). அதே ஊரைச் சேர்ந்த தனது தாய்மாமா முத்துக்குட்டி என்பவர் மகள் ரேஷ்மாவை (20) இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ரேஷ்மா வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வெளியூரில் தங்கி இருந்த இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் மாணிக்கராஜ் வீட்டிலிருந்த தம்பதி இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
This website uses cookies.