தூத்துக்குடி தெப்பக்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மீன்களை அகற்றினார்.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தெப்பக்குளம் இந்த தெப்பக்குளத்தில் பல்வேறு வகையான பண்ணா, எழுது உள்ளிட்ட ஏராளமான மீன்கள் வளர்ந்து வருகின்றன. இரவு நேரங்களில் தெப்பக்குளத்திற்கு வரும் பொதுமக்கள் மீன்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெப்பக்குளம் வெகு நாளாக சுத்தம் செய்யப்படாமல் அதில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற ஏராளமான மீன்கள் இன்று காலை தெப்பக்களும் முழுவதும் செத்து மிதக்க துவங்கியது. இதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் செத்து மிகுந்த மீன்களை அப்புறப்படுத்தினர்.
மேலும், தெப்பக்குளத்தில் செத்து மிகுந்த மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று இறந்ததா அல்லது வேறு ஏதேனும் வேதிப்பொருட்கள் தெப்பக்குளத்தில் மர்ம நபர்கள் யாரும் கலந்து அதன் காரணமாக நீர் மாசுபட்டு இறந்ததா என மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.