தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்த தொழிலாளியை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சாத்தான் குளம் புதுகுளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (வயது 47). இவர் மனைவி சங்கரிக்கு 2 பெண் குழந்தைகள்.
இவர் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சிறியதாக குடிசை கட்டி நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். தூத்துக்குடி 3ம் மைல் அருகில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் இவர், இன்று அதிகாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள அவரது கடையில் மர்மமாக இறந்து கிடந்தார்.
இதை அருகில் உள்ளவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி டவுன் பொறுப்பு உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.