தூத்துக்குடி அருகே உரம் ஏற்றி வந்த லாரியில் கயிறு பிரிந்து வந்ததால் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் கழுத்தில் சுற்றி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவரது மகன் முத்து (30). இவர் இன்று இருசக்கர வாகனத்தில் ஏரல் நோக்கி வரும்பொழுது, எதிரே வந்த உரம் ஏற்றி வந்த லாரியின் ஒரு மூட்டை சரிந்து கீழே விழுந்தது.
அப்போது, அதில் இருந்த கயிறு இருசக்கர வாகனத்தில் வந்த முத்துவின் கழுத்தில் சுற்றி கீழே இழுத்துப் போட்டது. இதனால், அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து, ஆம்புலன்ஸ் சீக்கிரமாக வந்த காரணத்தினால், தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் சாலையில் எதிரே சென்ற வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிடி காட்சிகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.