தூத்துக்குடி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் 5வது தெருவில் அரசு டாஸ்மாக் (கடை எண் 10147) செயல்பட்டு வருகிறது. இக்கடையில் ஊழியர்களான பொன்னகரத்தை சேர்ந்த சங்கர் (47), ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ரமேஷ்(47) ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மது வாங்க வந்த நான்கு பேர் ஊழியர்களான சங்கர், ரமேஷ் ஆகியோரிடம் மது பாட்டில் கேட்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வாக்குவாதம் முற்றி அந்த மர்ப நபர்கள் ஊழியர் சங்கரை மது பாட்டிலால் தலையில் கடுமையாக தாக்கி விட்டு, விற்பனைத் தொகை சுமார் 80 ஆயிரம் பணத்தை எடுத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தலையில் பலத்த படுகாயம் அடைந்த சங்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு விற்பனையாளர் ரமேஷ்க்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கடையின் மேற்பார்வையாளர் முத்துக்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் முருகனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.