கடும் மழையின் காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் தற்காலிக சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய தினம் 7.4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஒட்டப்பிடாரத்தில் 80 மில்லி மீட்டர் கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி-செக்காரக்குடி இடையே உள்ள சாலையில் தமிழக அரசு 3 கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் மாற்றுப்பாதை (தற்காலிக பாலம்) வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது இந்த மாற்று பாதை மேல் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய நிலையில், தற்காலிக பாலம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழியாக, கீழசெக்காரக்குடி, மேல செக்காரக்குடி, ஆலந்தா கிராமம், சிங்கத்தாக்குறிச்சி, மீனாட்சிபுரம், மணியாச்சி தட்டப்பாறை ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் வாகனங்களிலோ, நடந்தோ அந்த பகுதியை கடந்து செல்ல முடியாது என்பதால், அங்குள்ள பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், இதன் காரணமாக செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் 3 தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.