தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியரை கந்து வட்டி கேட்டு காரில் கடத்தி தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அனல் மின் நகரை சேர்ந்தவர் லிங்கதுரை (59). அனல் மின் நிலைய ஊழியரான இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முத்தையாபுரத்தை சேர்ந்த சக்திவேல் (43) என்பவர் மூலம் பிரதீப் (30) என்பவரிடம் ரூபாய் 2,10,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதற்காக ஒரு லட்சத்து 47 ஆயிரம் வரை வட்டி செலுத்தி உள்ளாராம். இந்நிலையில் கேம்ப்-2 பகுதி பஸ் நிறுத்தத்தில் லிங்கதுரை நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு காரில் வந்த பிரதீப், சக்திவேல் இரண்டு பேரும் சேர்ந்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் தர வேண்டும் என்று கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் புதுக்கோட்டை அருகில் காரிலிருந்து இறக்கி விட்டார்களாம்.
இதுகுறித்து தெர்மல் நகர் போலீசில் லிங்கதுரை புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப் பதிவு செய்து பிரதீப், சக்திவேல் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.