கோவில்பட்டி அருகே திருமணமாகாத மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வரும் முதிய பெண்ணை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பிச்சைத் தலைவன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இந்திராணி (52). இவர் சொந்த வீடு இல்லாததால் புறம்போக்கு நிலத்தில் ஐந்து வருடமாக தகர செட் அமைத்து, தனது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மேலும், தனது மாற்றுத்திறனாளி மகளுக்கு இவர்கள் குடியிருந்து வரும் புறம்போக்கு நிலத்தை பட்டாவாக வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியரிடமும் மனு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் அய்யனார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி மகள் திருமணமாகாத சரஸ்வதி (55) என்பவருக்கு அதே இடத்திற்கு இலவச மனைப் பட்டா வாங்கி தருவதாக உத்தரவாதம் தந்துள்ளதையடுத்து, இந்திராணியை அந்த இடத்தை காலி செய்து தரக் கூறி தொடர்ந்து தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார்.
இன்று இந்திராணியின் வீட்டிற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் இடத்தை காலி செய்து தரக் கோரி மிரட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் இந்திராணியை தகாத வார்த்தையால் திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதில் மயக்கம் அடைந்த இந்திராணியை அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததையடுத்து, அவரது மகன் விரைந்து வந்து கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மேலும் கிராம நிர்வாக அதிகாரி பெண்ணை தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
This website uses cookies.