தூத்துக்குடி ; திருமாஞ்சி நகரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள திருமாஞ்சி நகரைச் சார்ந்த ஜான்ராஜ் மகன் இம்மானுவேல் அப்துல்லா. அவரது மனைவி கன்னித்தாய். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து 5 வருடம் ஆகிறது.
இவர்களுக்கு சையது அலி பாத்திமா, கதீஜா பிஸ்மி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, கணவர் அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மீண்டும் இருவருக்கும் நடைபெற்ற தகராறில் மனைவி கன்னித்தாயை இமானுவேல் அப்துல்லா கட்டையால் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, முத்தையாபுரம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய இமானுவேல் அப்துல்லாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.