தூத்துக்குடியில் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் நேரு காலணியை சேர்ந்தவர் மகாராஜன் (37). கொல்லுபட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அன்பு (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
இதனால் மன வருத்தம் அடைந்த அன்பு ஒரு வருடத்திற்கு முன்பு தாளமுத்து நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், மகாராஜன் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மகாராஜன் மற்றும் அவரது அப்பா சுடலைமுத்து (65) இருவரும் அன்பு வீட்டுக்கு நேரில் சென்று அங்கிருந்த அன்புவை அரிவாளால் இருவரும் சேர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை கை கால் உட்பட பல இடங்களில் வெட்டு காயம் பட்ட அன்பு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து மகாராஜன் மற்றும் சுடலைமுத்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.